வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் ஆரம்பிக்கத்தான் சிறிது தயக்கம் இருந்தது. காரணம் பிரபல பதிவர் அடிக்கடி பதிவுகளை வலையேற்ற வேண்டுமே? (வேண்டாம் நீங்கள் முறைப்பது தேரிகிறது.) சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், தொடங்கித்தான் பார்ப்போமே! புலி வாலைப் பிடிக்க உத்வேகம் அளித்த ஜெயன் அண்ணாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
முதல் பதிவு என்று தலையங்கம் இட்டுவிட்டேன் ஆனால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. (இந்த இலட்சணத்தில் வலைப்பூ அதில் முதல் பதிவு வேறயா என்று தானே யோசிக்கிறியள்?) எனது பதிவு ஹிட்டானால் மிகவும் சந்தோசம். ............... எண்ணிக்கையான வாசகர்கள் வாசித்த பிரபல பதிவர் என்னும் பெயர் கிடைக்கும். (இது வேற!!!) இல்லை மொக்கையாக இருந்தாலும் ஒரு வகையில் சந்தோசமே. இவரைப்போல எழுத வேண்டும் என சிலரைச் சொல்வார்களே, அது போல என்னைப்போல எழுத வேண்டாம் என பலர் சொல்வார்கள். எப்பிடியெண்டாலும் எனது பெயர் வலைப்பதிவுகளில் வாழும். (இல்லை நாறும் என நீங்கள் நினைப்பது தெரிகிறது.) அப்பிடியே படிப்படியாக வளர்ந்து மொக்கை பதிவர் சங்க தலைவர் பதவியையும் அடைய முடியும் அல்லவா? லிஃப்டில் செல்லலாம் ஆனாலும் இடையில் நின்று விடுமோ என்று பயமாக இருக்கு. எனவே படியே சிறந்தத
ஏன் இந்த விபரீத முடிவு என எனது நலன் விரும்பிகள் நினைக்கக் கூடும். என்ன செய்வது அடி வாங்கினால் தான் கைப்புள்ள ஃபேமஷ் ஆன பயபுள்ள ஆக முடியும். (எப்பிடி பன்ச்???)
இது ஒருபக்கம் இருக்க, நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அது அரைஇறுதி இல்லை. புதுசா தகுதிகாண் சுற்று என்று வந்தபடியா ரோயல் சலஞ்சர்ஸ் பெகங்களூருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கு. இன்று வெற்றிபெறும் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தெரிவாக முடியும். எனவே பெங்களூரின் கிண்ண வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை.
கிரிஸ் கைல் துடுப்பாட்டத்தில் சோபிக்காவிட்டால் யார் அடித்தால் என்ன தோல்விதான் போலும். சுரேஸ் ரெய்னாவின் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. ஆரம்பத்தில் அடக்கி வாசித்துவிட்டு தேவையான நேரத்தில் அட்டகாசமான ஆட்டம். காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதும் வலியைப் பொறுத்துக்கொண்டு வலிமையாகப் பந்துகளை பெவிலியனுக்கு அனுப்பிய லாவகத்தை என்னவென்று சொல்வது. வலியுடன் சிரமப்பட்ட ரெய்னா தான் பெவிலியன் போக வழி இல்லையே என்று பந்துகளை பெவிலியன் அனுப்பினார் போலும். அடுத்ததாக அல்பி மோர்க்கெல், இறுதி நேரத்தில் என்ன ஒரு சரவெடி. பந்துவீச்சாளரின் காதில் வில்லு பட பாடல் இப்படி கேட்டிருக்கும்
"நான் அடிச்சா தாங்க மாட்டே
அடுத்த பந்து போடமாட்டே
போட்டுபாரு பந்தை காணமாட்டே"
பாவம் விட்டோரியும் என்ன செய்வது அனுபவ பந்துவீச்சாளர் சகீர் கான் மற்றும் சமீபகாலமாக சிறப்பாக பந்து வீசிய அரவிந்த் இறுதி நேரத்தில் ஓட்டங்களை வாரி வழங்கினார்கள். கிரிஸ் கைல் சிறப்பாக பந்து வீசியும் பயனில்லை.
சென்னை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுக்கு ஒரு தமிழனாக எனது வாழ்த்துக்கள்.
பி.கு: வீராச்சாமி படத்துக்கு பிரபல சஞ்சிகை ஒன்றில் அரைப்பக்க விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். கவனிக்கவும் அரைப்பக்க விமர்சனம் தான். இறுதியில் "இந்தப்படத்தில் சென்டிமென்ட், சண்டைக்காட்சி, கொமெடி, பன்ச் வசனம் அனைத்தும் உள்ளன. ஆனால் ஒன்றுமே தேவையான இடத்தில் இல்லை". அது போலவே எனது பதிவிலும் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாவிட்டாலும் தேவையான விடயங்கள் இருந்தால் சந்தோசம்.
அடுத்த பதிவு எனக்கு வரும் மிரட்டல் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
keep it up........
ReplyDeleteமுயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!
ReplyDeletevillu illai vettaikkaran
ReplyDeleteadei kuga athu villu padam illai, Vettaikaaran padam
ReplyDeletenice.............
ReplyDeleteபதிவுலகுக்கு வரவேற்கிறேன்
ReplyDeleteவாங்க மக்கா வாங்க .....
ReplyDelete