மறுபடியும் கோலாலம்பூர் விமானநிலையம். நேற்று எங்களை செல்லாவிடாமல் தடுத்த அந்த கடமைவீரனை தேடிப்பார்த்தோம். நாங்கள் வருவது தெரிந்து ஓடிவிட்டான் போலும். பாவம் பிழைத்துப்போகட்டும் என்று அவனை மன்னித்துவிட்டு நாங்கள் விமானமேறினோம். மலேசியாவில் இருந்து புறப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மணித்தியாலங்களில் சியாம் ரெப் நிலப்பரப்பு கண்ணுக்குத் தென்பட்டது. பாம்பு போல நெளிந்து செல்லும் வீதிகளும் குறைந்த எண்ணிக்கையில் தென்பட்ட வீடுகளும் பரந்து விரிந்த விவசாய நிலங்களும் இலங்கையில் உள்ள பாரம்பரிய விவசாய கிராமங்களை நினைவூட்டியது.
விமானம் தரையிறங்கியதும் விரைவாக அனைவருக்கும் முன்னதாக குடிவரவு நிலையத்தையடைந்தோம். இலங்கையர்களுக்கு விசேட வரவேற்பு கிடைக்குமென்பதால் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எதிர்பார்த்தது போலவே எனது கடவுச்சீட்டை சமர்ப்பித்ததும் அங்கு கடமையில் இருந்த அதிகாரி தனது உயரதிகாரியை அழைத்தார். அவர் எங்கள் அறுவரையும் அழைத்துச்சென்று ஒரு அறையில் அமரவைத்தார். எங்களிடம் விசாரணை தொடங்கியது. அங்கே வந்த காரணம், தற்போது சிங்கப்பூரில் செய்யும் வேலை மற்றும் எமது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்தும் பிரதியெடுக்கப்பட்டன. ஏறக்குறைய முப்பது நிமிடங்களின் பின்னர் கம்போடியாவிற்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
விமானநிலையத்தின் வெளியே வந்ததும் நாங்கள் முன்பதிவு செய்த விடுதியின் வாகனமோட்டி எமக்காக காத்திருந்தார். எம்மை அழைத்துச்சென்று வாகனத்தில் வலதுபக்கமாக ஏறச்சொன்னார். எறியபின்னர்தான் புரிந்தது அங்கே புழக்கத்திலிருப்பது அமெரிக்க டொலர் மட்டுமல்ல வீதியின் வலதுபுறமாக வாகனமோட்டுவதும் என்று. விடுதிக்கு சென்று சீக்கிரமாக தயாராகி அங்கோர்வாட்டுக்கு புறப்பட்டோம். அங்கோர்வாட்டுக்கான நுழைவுச்சீட்டு மேலும் பல இடங்களுக்கான அனுமதியையும் கொண்டுள்ளது. அனுமதிச்சீட்டு ஒருநாள், மூன்றுநாட்கள் மற்றும் ஏழுநாட்கள் என மூன்றுவகைப்படும். மூன்றுநாட்களுக்கான அனுமதிச்சீட்டு 30 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது.
இதுவரை தகவல்களாகவும் காணொளிகளாகவும் அறிந்திருந்த அங்கோர்வாட்டைப் பார்த்ததும் ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது. ஏற்கனவே நாம் அறிந்திருந்தவற்றை அங்கிருந்தவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கினோம். உள்ளே செல்லச்செல்ல கோயிலின் பிரமாண்டம் கண்முன்னே விரியத்தொடங்கியது.
சுற்று மண்டபத்தின் நான்கு பக்க சுவர் முழுவதும் இராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருந்தன. நூற்றாண்டுகளானாலும் சோபையிழக்காத சிற்பவேலைப்பாடுகள். எத்தனையெத்தனை உளி ஏந்திய கரங்கள் வருடக்கணக்காக இந்த சிற்பங்களை செதுக்கிருக்கும் எனநினைக்கும்போது மலைப்பாக இருந்தது.
கட்டடத்தின் அமைப்பை உற்றுநோக்கினால் அது மற்றுமொரு ஆச்சரியம். அளவாக வெட்டப்பட்ட மில்லியன் கணக்கான கற்களைக்கொண்டு அக்கோயில் கட்டப்பட்டிருந்தது. கற்களுக்கிடையில் சாந்து போன்ற எதுவும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. கற்களை தேவையான அளவுகளில் உள்ளே நகர்த்திவைப்பதன் மூலமே கூரை மற்றும் கோபுரம் அனைத்தும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லும் தனது பாரத்திலும் மேலே உள்ள கல்லின் பாரத்தாலும் நிலையாக நிற்கிறது. சில இடங்களில் கூரையில் இருக்கும் கற்கள் விழுந்துவிடுமோ என அஞ்சவைக்கிறது. இதுவும் ஒருவகையான "ஆர்ச்" தொழில்நுட்பம் போல் தோன்றியது.
கோயிலின் ஒவ்வொரு தளமும் முதல் தளத்தைவிட உயரம் அதிகம். கோயிலின் கருவறை அமைந்திருக்கும் தளம்தான் மிக அதிக உயரமுடைய தளம். அதற்குச் செல்ல ஏறத்தாள ஐம்பது படிகள் ஏறவேண்டும் அதற்கு முந்தைய தளத்திலிருந்து. தற்போது இரும்பாலும் மரப்பலகையாலும் புதிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அசலான கற்படிகள் மிகவும் குறுகலானவை. அத்தகைய படிகளில் முற்காலத்தில் எவ்வாறுதான் சென்றுவந்தார்களோ? கருவறை அமைந்திருக்கும் பகுதியின் உறுதித்தன்மைக்காக (stability) குறிப்பிட்ட எண்ணிக்கையான நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
கருவறை நான்கு பக்கமும் வாயில்களைக்கொண்டதும் மேலே கோபுரம் ஒன்றையும் கொண்டுள்ளது. நான்கு வாயில்களிலும் சுவரெழுப்பி உள்ளே இருக்கும் ஆரம்பகால தலமூர்த்தி மறைக்கப்பட்டுள்ளது. சுவரின் வெளியே நான்கு பக்கத்திலும் நான்கு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கோர்வாட் இந்துக்கோயிலாக இருந்தபோது விஷ்ணுவுக்காக கட்டப்பட்டது. கருவறையில் மறைக்கப்பட்டு தற்போதும் உள்ளே இருக்கும் சிலை விஷ்ணுவின் ஒரு அம்சமான "பாகன்" (Bakan) என அழைக்கப்படுகிறது.
அடுத்ததாக நாங்கள் பார்த்தது "பயன் கோயில்" (Bayon Temple). அங்கோர்வாட்டில் இருந்து ஏறத்தாள நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஆரம்பகாலத்தில் பௌத்த ஆலயமாக கட்டப்பட்டு பின்னால் இந்து ஆலயமாக மாற்றப்பட்டு மறுபடியும் பௌத்த ஆலயமாகத் திகழ்கிறது. இவ்வாலயமும் அங்கோர்வாட் போலவே கற்களை அடுக்கியே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு கற்களை அடுக்கி அதன்மேல் செதுக்கப்பட்ட பிரமாண்டமான முகம்கள். இக்கோயிலின் நுழைவாயிலிலுள்ள சுவற்றிலும் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இங்கே சென்றபோது உள்ளே பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கூடியிருந்து வழிபாடுகள் செய்வதைப் பார்க்கமுடிந்தது.
பயன் கோயிலை சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. நடந்துசெல்லும் தொலைவில் அமைந்திருக்கும் மேலுமிரு கற்கோயில்களையும் சென்று பார்த்தோம். ஆனால் அக்கோயில்கள் பூட்டப்பட்டிருந்தன. அங்கு குறிப்பிடத்தக்க விசேடஅம்சம் எதுவும் தெரியவில்லை என்பதால் நாங்களும் உள்ளேசெல்ல ஆர்வப்படவில்லை.
அனைத்தையும் பார்த்து முடிக்கும்போது இருட்டத்தொடங்கிவிட்டது. அன்றையநாள் முழுவதும் பார்த்த இடங்கள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. எவ்வளவு கற்கள்! எங்கிருந்தோ வெட்டியெடுத்து அவற்றை வேறொரு இடத்துக்கு கொண்டுவந்து பின்னர் அவற்றை அளவாக வெட்டி அதையெல்லாம் ஒன்றுசேர்த்து அழகான பிரமாண்டமான கட்டடங்களாகக் கட்டிமுடித்து அதன் சுவர்களில் சிற்பவேலைப்பாடுகள் செய்துமுடித்ததை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்புக்கு அளவேயில்லை.
தொடர்புடைய பதிவு: அங்கோர்வாட் - 1 : விமானநிலையத்தில் வாக்குவாதம்
விமானநிலையத்தின் வெளியே வந்ததும் நாங்கள் முன்பதிவு செய்த விடுதியின் வாகனமோட்டி எமக்காக காத்திருந்தார். எம்மை அழைத்துச்சென்று வாகனத்தில் வலதுபக்கமாக ஏறச்சொன்னார். எறியபின்னர்தான் புரிந்தது அங்கே புழக்கத்திலிருப்பது அமெரிக்க டொலர் மட்டுமல்ல வீதியின் வலதுபுறமாக வாகனமோட்டுவதும் என்று. விடுதிக்கு சென்று சீக்கிரமாக தயாராகி அங்கோர்வாட்டுக்கு புறப்பட்டோம். அங்கோர்வாட்டுக்கான நுழைவுச்சீட்டு மேலும் பல இடங்களுக்கான அனுமதியையும் கொண்டுள்ளது. அனுமதிச்சீட்டு ஒருநாள், மூன்றுநாட்கள் மற்றும் ஏழுநாட்கள் என மூன்றுவகைப்படும். மூன்றுநாட்களுக்கான அனுமதிச்சீட்டு 30 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது.
இதுவரை தகவல்களாகவும் காணொளிகளாகவும் அறிந்திருந்த அங்கோர்வாட்டைப் பார்த்ததும் ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது. ஏற்கனவே நாம் அறிந்திருந்தவற்றை அங்கிருந்தவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கினோம். உள்ளே செல்லச்செல்ல கோயிலின் பிரமாண்டம் கண்முன்னே விரியத்தொடங்கியது.
சுற்று மண்டபத்தின் நான்கு பக்க சுவர் முழுவதும் இராமாயண மற்றும் மகாபாரத காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருந்தன. நூற்றாண்டுகளானாலும் சோபையிழக்காத சிற்பவேலைப்பாடுகள். எத்தனையெத்தனை உளி ஏந்திய கரங்கள் வருடக்கணக்காக இந்த சிற்பங்களை செதுக்கிருக்கும் எனநினைக்கும்போது மலைப்பாக இருந்தது.
கோயிலின் ஒவ்வொரு தளமும் முதல் தளத்தைவிட உயரம் அதிகம். கோயிலின் கருவறை அமைந்திருக்கும் தளம்தான் மிக அதிக உயரமுடைய தளம். அதற்குச் செல்ல ஏறத்தாள ஐம்பது படிகள் ஏறவேண்டும் அதற்கு முந்தைய தளத்திலிருந்து. தற்போது இரும்பாலும் மரப்பலகையாலும் புதிய படிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அசலான கற்படிகள் மிகவும் குறுகலானவை. அத்தகைய படிகளில் முற்காலத்தில் எவ்வாறுதான் சென்றுவந்தார்களோ? கருவறை அமைந்திருக்கும் பகுதியின் உறுதித்தன்மைக்காக (stability) குறிப்பிட்ட எண்ணிக்கையான நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
கருவறை நான்கு பக்கமும் வாயில்களைக்கொண்டதும் மேலே கோபுரம் ஒன்றையும் கொண்டுள்ளது. நான்கு வாயில்களிலும் சுவரெழுப்பி உள்ளே இருக்கும் ஆரம்பகால தலமூர்த்தி மறைக்கப்பட்டுள்ளது. சுவரின் வெளியே நான்கு பக்கத்திலும் நான்கு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அங்கோர்வாட் இந்துக்கோயிலாக இருந்தபோது விஷ்ணுவுக்காக கட்டப்பட்டது. கருவறையில் மறைக்கப்பட்டு தற்போதும் உள்ளே இருக்கும் சிலை விஷ்ணுவின் ஒரு அம்சமான "பாகன்" (Bakan) என அழைக்கப்படுகிறது.
அடுத்ததாக நாங்கள் பார்த்தது "பயன் கோயில்" (Bayon Temple). அங்கோர்வாட்டில் இருந்து ஏறத்தாள நான்கு கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஆரம்பகாலத்தில் பௌத்த ஆலயமாக கட்டப்பட்டு பின்னால் இந்து ஆலயமாக மாற்றப்பட்டு மறுபடியும் பௌத்த ஆலயமாகத் திகழ்கிறது. இவ்வாலயமும் அங்கோர்வாட் போலவே கற்களை அடுக்கியே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு கற்களை அடுக்கி அதன்மேல் செதுக்கப்பட்ட பிரமாண்டமான முகம்கள். இக்கோயிலின் நுழைவாயிலிலுள்ள சுவற்றிலும் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இங்கே சென்றபோது உள்ளே பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கூடியிருந்து வழிபாடுகள் செய்வதைப் பார்க்கமுடிந்தது.
பயன் கோயிலை சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. நடந்துசெல்லும் தொலைவில் அமைந்திருக்கும் மேலுமிரு கற்கோயில்களையும் சென்று பார்த்தோம். ஆனால் அக்கோயில்கள் பூட்டப்பட்டிருந்தன. அங்கு குறிப்பிடத்தக்க விசேடஅம்சம் எதுவும் தெரியவில்லை என்பதால் நாங்களும் உள்ளேசெல்ல ஆர்வப்படவில்லை.
அனைத்தையும் பார்த்து முடிக்கும்போது இருட்டத்தொடங்கிவிட்டது. அன்றையநாள் முழுவதும் பார்த்த இடங்கள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. எவ்வளவு கற்கள்! எங்கிருந்தோ வெட்டியெடுத்து அவற்றை வேறொரு இடத்துக்கு கொண்டுவந்து பின்னர் அவற்றை அளவாக வெட்டி அதையெல்லாம் ஒன்றுசேர்த்து அழகான பிரமாண்டமான கட்டடங்களாகக் கட்டிமுடித்து அதன் சுவர்களில் சிற்பவேலைப்பாடுகள் செய்துமுடித்ததை நினைக்கும்போது ஏற்படும் பிரமிப்புக்கு அளவேயில்லை.
தொடர்புடைய பதிவு: அங்கோர்வாட் - 1 : விமானநிலையத்தில் வாக்குவாதம்
No comments:
Post a Comment